வேல்.ஆம் நமது நாயகன்.அவனது பிறப்பில் அவனுக்கு ஓர் அற்புத உலகம் அமையபோகிறது என்பதை அவனது குடும்பத்தினரும் உணரவில்லை,உலகத்தினரும் உணரவில்லை.அப்படி பிறக்கும் போதே புதிர்களின் மொத்த உருவமாக பிறந்தான்.அவனது ஆரம்ப கால நாட்கள் அவனுக்கு மறக்க நினைக்கும் மங்காத நாட்களே.
அவனது தந்தை ஓர் சாராய வியாபாரி.நீங்கள் நினைப்பதைப்போல் சினிமாவில் வரும் வியாபாரி அல்ல.நேரம் காலம் இல்லாமல் குடித்துவிட்டு,எதிர்காலத்தை பற்றி எந்த சிந்தனையும் இன்றி,உடல்நலத்தில் ஒருதுளி கூட அக்கறையின்றி,குடும்பத்தை பற்றி கவலையின்றி வாழ்ந்த ஓர் உண்மையான மனிதர்.
அவனது தாயோ படிப்பறிவு சிறிதுமின்றி கூலி வேலை செய்து,குடிகார கணவனுடன் குதூகலமின்றி குடும்பத்தை ஒட்டிய ஓர் உத்தமி.
வேல் படிப்பதில் கெட்டிக்காரன்,ஆனால் அவனது குடும்ப சூழல் அவனை படிப்பதில் அவ்வளவாக ஈடுபடுத்தவில்லை.ஆனாலும் படித்தான்.அவனது ஆரம்பக்கல்வி அவனது சிறு கிராமதிலேயே ஆரம்பித்தது.அவனது தலைஎழுத்து தெரியாமல் போனாலும்,அவன் கையெழுத்து அழகாக இருந்தது,அவனது வாழ்க்கையை தவிர.அவனது முதல் தன்னம்பிக்கை உணர்வு,அந்த பள்ளியில் பணிபுரிந்த சமையல் டீச்சர் மூலம் அடைந்தான்.பள்ளி அறையை கூட்டும்போது அவனின் உண்மையான,ஈடுபாட்டான செயலை பார்த்து நீ வாழ்க்கையில் முன்னேறுவாய் என்று மனதார பாராட்டினார்.
இப்படியாக சென்று கொண்டிருந்த இவனது படிப்பில் இவனது தந்தையோ,தாயோ கவனிக்கவில்லை,அவர்களுக்கு கவனிக்கும் அளவுக்கு தெரியவில்லை.தனது வயதொத்த சிறுவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது என்பதும் இவனுக்கு அவ்வளவாக வாய்க்கவில்லை.அதற்கு முக்கிய காரணம் இவனது சாதிக்காரர்களில் வயல்வெளி,கால்நடைகள்,விசாலமான வீடு,நெருங்கிய சொந்தபந்தம் இவனது குடும்பத்துக்கு கடுகளவும் கிடையாது.
அப்படி இருக்க இவனது வயதை ஒத்த சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அவர்களின் வயல்வெளியிலும்,அவர்களின் கால்நடைகளை பராமரிப்பதிலும்,அவர்களின் சொந்தபந்தங்களின் வீடுகளுக்கும்,விஷேசங்களுக்கும் சென்று பொழுதை களிப்பார்கள்.ஆனால் நமது நாயகனுக்கு அந்த கொடுப்பினை இல்லை.
அதனால் அவனின் விடுமுறை நாட்கள் அவனது அருகில் உள்ள வேற்று சாதிக்காரர்களின் குடும்பத்துடனும்,அவனின் குடும்ப நிலையை ஒத்த வசதி இல்லாத குடும்பத்துடன் பழகி ஏதோ அவனது வாழ்க்கையை ஓட்டினான்.
அப்படி பழகிய ஓர் சிறுமியின் பெயர் செல்லம்மா.அவனுக்கும் ,அவளுக்கும் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு.அவளின் வீட்டிலேயே கலி சாப்பிடுவதும்,அவளுடன் விளையாடியும் பொழுதை நிம்மதி இல்லாமலே கழித்து வந்தான்.
வேலனுக்கு சிறு வயது முதலே காமத்தில் சிறு ஈடுபாடு.அப்பவே எட்டு வயதிலேயே அவன் அவன் தோழியுடன் அம்மா,அப்பா விளையாட்டு விளையடுவான்ன பாத்துக்கங்களே.அதையும் ஒரு முறை அவனின் அம்மா பார்த்து விட்டதால் அதோடு அவர்களின் உறவும் அறுந்துவிட்டது.
அவனது ஆரம்பக்கல்விக்கு பெரிதாக செலவு இல்லை.உடைகள்,காலணிகள்,மதிய உணவு ஆகியவைகள் பள்ளியிலே தந்துவிட்டனர்.தேவையான சிலேடு,சில நோட்டுகள் மட்டும் அவனது சித்தப்பா வாங்கிக்கொடுப்பார்.அவனது அம்மா தன் விவசாய கூலி காசில் பென்சில்,மிட்டாய் வாங்க கொஞ்சம் தருவாள்.மற்றபடி பொங்கல்,தீபாவளி,உள்ளூர் பண்டிகைகள் போன்ற விஷேசமான நாட்களில் அவனுக்கு கிடைப்பது அன்று மட்டும் அவனது அம்மா சுட்டு தரும் இட்லி மட்டுமே அவனது பண்டிகைகால கொண்டாட்டம்,அதுவும் அவன் தந்தை போதை இல்லாமல் இருந்தால் மட்டுமே.அந்த பண்டிகை நாட்களில் அவனை ஒத்த சிறுவர்,சிறுமிகள் அவர்களின் சொந்தபந்தங்களின் வீட்டுக்கு சென்றுவிடுவர்.இவனுக்கு தன் அதுவும் இல்லையே.
எப்படியோ அவனுக்கும் நினைவு தெரிந்து ஐந்து வருடம் ஓடியது.அப்போதே அவன் கனவு கண்டுகொண்டிருப்பான்.அவனது தந்தை சாராயம் குடிக்காமல் இருப்பது போலவும்,அவனது அம்மாவை அடிக்காமல் இருப்பது போலவும்,இவனிடம் கொஞ்சி பேசுவது போலவும்.என்ன பண்ண அவன் கனவு நிறைவேற ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.....
(மீண்டும் வேலனை காண்போம்....)
Playtech - New Zealand's #1 supplier of gaming equipment
ReplyDeletePlaytech, an innovator febcasino of software and services for online 출장안마 gaming jancasino.com and iGaming products, have partnered ventureberg.com/ with supplier 바카라 Casino.