நமது நாடும்.நமது சமுதாயமும் செல்லும் வழியில் நம் செல்ல முடிகிறதா நண்பர்களே.நமது நாட்டில் சேவைகளாக நம் நினைக்கும் துறைகளை ஒருசில நிமிடமாவது நாம் நினைக்கிறோம,என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு அத்யாவசியமான,மிகமுக்கியமான நமது கல்வித்துறையை பார்க்கிறீர்கள் தானே.பணம் இருந்தால்,அதுவும் நம்மைப்போல் சராசரி மனிதர்களால் சமாளிக்க இயலாத அளவில் மட்டுமே கல்வித்துறை இருக்கிறது.அதிலும் நம்மைப்போல சராசரி இனத்தவர்களுக்கே உரித்தான பிரஸ்டீஜ் கடன் வாங்கியாவது பெயர் சொல்லும் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு படும் அல்லல்களை சொல்லவும் இயலாமல்,மெல்லவும் இயலாமல் வட்டி கட்டி கட்டியே நிம்மதி இல்லாமல் மைந்து போகிறோம்.
எதற்கு நாம் குழந்தைகளாவது நன்கு படித்து நல்லபடியா வாழனும் என்றைய ஆசையால்.அந்த ஆசைக்கும் விழும் அடிதான் சமுதாய ஒழுக்கக்கேடு.
அதேபோல் இன்னொரு துறை மருத்துவம்.அது ஒன்னே நம்மை போல சராசரி மனிதர்களின் சம்பாத்தியத்தை முழுவதுமாக அறிக்கை.நன்றாக படிப்பவர்களே இந்த உயிர் காக்கும் தெய்வீக சேவையை செய்ய முடியும் என்ற நோக்கத்திலே தான் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இருந்தது.ஆனால் இப்போது அப்படியா.இல்லை கோடி கோடியாக கொட்டி மாடமாளிகை போல மருத்துவமனை கட்டிவிட்டு சும்மாவா அதை விட முடியும்.பல லட்சங்களை கொடுத்தாவது தான் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்கி விடுகிறார்கள்,அவர்களுக்கு அதில் ஈடுபாடு இருந்தாலும் சரி,இல்லாவிட்டாலும் சரி.பணம் கொடுத்து வாங்கிய பட்டமல்ல அதன் செயல்பாடு எப்படி இருக்குமென நாம் நினைத்தால் புரியும்.
அடுத்து ஆன்மிகம்.இதுபோல் ஒரு நல்ல துறையும் இல்லை,மோசமான துறையும் இல்லை.யார் வேண்டுமானாலும் சம்பாரிக்க நினைத்தால்,சும்மா இருந்துகொண்டு சம்பாரிக்க நினைத்தால்,மற்றவர்களை சுலபமாக ஏமாற்ற தெரிந்தால்,நமது உண்மையான ஆயிரக்கணக்கான மகான்களின் சில சொற்களையும்,செயல்களையும் மனனம் செய்ய தெரிந்தால்,சில பண ஆசைகொண்ட சோம்பேறிகள் சீடர்களாக கிடைத்து விட்டால் போதும் நாமும் சாமியாராகி விடலாம்.
நமது பண்டைய மகான்களின் வாழ்க்கை முறையும்,அவர்களின் தத்துவங்களும்,அவர்களின் உயரிய நோக்கமும் இப்போது உள்ள சாமியார்களிடம் இருக்கிறதானு நினைத்து பாருங்கள்.இப்பவும் உண்மையான சாமியார்கள் இருக்கலாம்,ஆனால் அவர்களின் நோக்கம் என்னனு தெளிவா சொல்ல மறுக்கிறார்கள்.
அனைத்து சாமியார்களும் அன்பு,அமைதி,தன்னையே அறிதல்,கோவத்தை குறைத்தல்,எல்லா உயிர்களிடமும் ஒற்றுமை பேணுவது போன்ற பண்டைய மகான்களின் நோக்கங்களையே சொல்கின்றனர்.அப்படி இருக்கும் போது நமது நாட்டில் எத்தனை ஆயிரம் சாமியார்கள் இருக்கின்றனர்.அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா,அவர்களின் நோக்கம் ஒன்று தானே,பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் அமைதிக்கும்,அன்புக்கும் பாடுபடலாமே.?
ஏன் தனித்தனியாக சீடர்களை அமர்த்திக்கொண்டு,கற்பனைக்கு எட்டாத அளவில் மாட மாளிகைகள் கட்டிக்கொண்டு,எளிமை என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாமல் பகட்டாக,எதோ அவர்கள் தான் கடவுள் போன்று மாய தோற்றத்தை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு,உலக கோடிஸ்வரர்கள் கூட சம்பாதிக்க முடியாத கருப்பு பணத்தையும்,போலி புகழையும் உருவாக்கிக்கொண்டு தான் நம்மை அமைதியாகவும்,அன்பாகவும் வாழ வைக்க வேண்டுமா.?
வள்ளலார்,திருமூலர்,திருவள்ளுவர் போன்ற மகான்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா.?இவர்களால் யார் யார் பயன் பெறுகிறார்கள்,நம்மை போன்ற சராசரி மனிதர்களா.இல்லவே இல்லை.ஏமாற்றுவதை மட்டுமே தொழிலாக கொண்ட சில அரசியல்வாதிகள்,ஏமாற்றியே சம்பாதிக்கும் எண்ணம் கொண்ட தொழிலதிபர்கள்,நாகரீகம் என்ற போர்வையில் மாயையாக வாழும் பணக்கார மகளிர்கள் மட்டுமே இந்த ஹை டெக் சாமியார்களால் பயன் பெறுகிறார்கள்.
அவர்களுக்கு தான் கோவமே வராதே,அன்பை மட்டுமே மூச்சாக கொண்டவர்களே,அமைதியை மட்டுமே கொள்கையாக கொண்டவர்களே,அப்படி இருக்க ஏன் சாமியார்களான,முற்றும் துறந்த மனிதர்களான அவர்களே ஒற்றுமையாக இருக்காமல்,எதோ தனித்தனி நாட்டு அரசர்கள் போல தோரணையாக வாழ்கின்றனர்,அதுவும் நோயோடு,பல கெட்ட பழக்கங்களோடு.
நமது மனம் மாறிவிட்டது.நமது உழைப்பும் மங்கிவிட்டது.நமது உண்மையும் தூங்கிவிட்டது.நமது மனசாட்சியும் அழிந்துவிட்டது.ஆனால் தேவைக்கும் ரொம்ப அதிகமான பொன்,பொருள்,பணம்,புகழ்,சொத்துக்கள்,தொழில்கள்,வருமானங்கள்,பெண்கள் போன்றவைகள் எல்லாமும் தானாக கிடைக்கவேணும்,இல்லாவிட்டால் எவனையாவது ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும்.இப்படி ஆகி விட்டது நமது வாழ்க்கை முறை.
மாதம் முழுதும் சம்பாதித்தால் கிடைக்கும் சம்பளம் சில செயல்களுக்கு கொடுக்கும் கிம்பலத்துக்கே பத்தாது என நினைக்க மட்டுமே நம்மால் முடியும்.அப்படி இருக்க நாம் எப்படி சாமியார்களுக்கு பணிவிடை செய்ய முடியும்,அதுவும் அதிக பணம் செலவு பண்ணி.உண்மையான சாமியார்களை அறிய முற்படும் முன் நாம் எண்ணங்களையும்,செயல்களையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.அப்போது தான் நாமும்,நம்மை சார்ந்தவர்களையும் சிறிதளவேனும் அமைதியாகவும்,சந்தோசமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
இருப்பதை கொண்டு சிறப்பாக வாழவும்,நாம் உண்மையாக சம்பாதிக்க ஆன முயற்சிகளை எடுப்பதும்,உண்மையாகவும் ,சிறிதளவு இரக்கத்துடனும்.கொஞ்சம் மனிதாபமானதுடனும் இருந்தால் மட்டுமே நாம் அமைதியாகவும்,நிம்மதியாகவும் வாழ முடியும் என்பதை உணரவேண்டும்.அப்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.பிறகு எதற்கு சாமியார்கள் நமக்கு நாமே சாமிகள்.
No comments:
Post a Comment